Bible Language

1 Kings 18 (AKJV) American King James Version

Versions

TOV   அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
IRVTA   {எலியாவும் ஒபதியாவும்} PS அநேகநாட்கள் சென்று, மூன்றாம் வருடமாகும்போது, யெகோவாவுடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார்.
ERVTA   மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், மழை பெய்யவில்லை. கர்த்தர் எலியாவிடம் "போய் ஆகாப் அரசனைப் பார். நான் மழையை அனுப்புவேன்" என்றார்.
RCTA   நாட்கள் பல நகர்ந்தன. மூன்றாவது ஆண்டில் ஆண்டவர் எலியாசை நோக்கி, "நீ ஆக்காபிடம் செல். நாம் நாட்டின் மேல் மழை பொழியச் செய்வோம்" என்று திருவுளம் பற்றினார்.
ECTA   பல நாள்களுக்குப் பிறகு, பஞ்சத்தின் மூன்றாம் ஆண்டில். ஆண்டவர் எலியாவிடம், "ஆகாபு உன்னை காணுமாறு போய் நில். நான் நாட்டில் மழை பெய்யச் செய்வேன்" என்று கூறினார்.