Versions
TOV நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக் கொண்டார்கள்.
IRVTA நமக்கு ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்ட அப்சலோம் யுத்தத்திலே இறந்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்துவராமல் நீங்கள் சும்மாயிருக்கிறது என்ன என்று சொல்லிக்கொண்டார்கள்.
ERVTA நம்மை ஆள்வதற்கு அப்சலோமைத் தேர்ந்தெடுத்தோம்,ஆனால் அவன் போரில் மரித்துப் போனான். நாம் தாவீதை மீண்டும் அரசனாக்க வேண்டும்" என்றார்கள்.
RCTA நாங்கள் எங்கள் அரசராய் இருக்கும்படி அபிஷுகம் செய்து ஏற்படுத்தின அப்சலோம் போர்க்களத்தில் உயிர் இழந்தாரே. அப்போது அரசரைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் வாளாயிருப்பதேன்?" என்று கூறி வந்தார்கள்.
ECTA நம்மை ஆளுமாறு நாம் திருப்பொழிவு செய்த அப்சலோமோ போரில் இறந்துவிட்டான். இனி நீங்கள் அரசரைத் திருப்பியழைத்து வராமல் வாளாயிருப்பதேன்?