Bible Language

2 Samuel 14:15 (AKJV) American King James Version

Versions

TOV   இப்பொழுதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை.
IRVTA   இப்பொழுதும் நான் என்னுடைய ஆண்டவனாகிய ராஜாவோடு இந்த வார்த்தையைப் பேசவந்த காரணம் என்னவென்றால்: மக்கள் எனக்குப் பயமுண்டாக்கியதால், நான் ராஜாவோடு பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளான நான் நினைத்ததாலும் வந்தேனே தவிர வேறொன்றுமில்லை.
ERVTA   எனது ஆண்டவரா கிய அரசனே, நான் இவ்வார்த்தைகளை உம்மிடம் கூற வந்தேன். ஏனெனில் ஜனங்கள் என்னைப் பயமுறுத்தினர். நான் எனக்குள் சொல்லியதாவது, "நான் அரசனிடம் பேசுவேன். அரசன் ஒருவேளை எனக்கு உதவலாம்.
RCTA   அப்படியிருக்க, நான் என் தலைவராகிய அரசரிடம் நான்கு பேர் கேட்க இக்காரியத்தைப் பற்றிப் பேச வந்தேன். 'நான் அரசரிடம் போய்ப் பேசுவேன். அவர் ஒருவேளை தம் அடியாளுடைய விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வார்' என்று உம் அடியாள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ECTA   இதைக் என் தலைவராம் அரசரிடம் நான் கூறவந்தபோது, மக்கள் என்னை அச்சுறுத்தினர்; உமது அடியவளோ நான் அரசரிடம் போவோம். ஒரு வேளை அரசர் தம் அடியவளின் வார்த்தைக்குச் செவிக் கொடுப்பார்.