Bible Language

2 Samuel 14:30 (AKJV) American King James Version

Versions

TOV   அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப் போட்டார்கள்.
IRVTA   அப்பொழுது அவன் தன்னுடைய வேலைக்காரர்களைப் பார்த்து: இதோ என்னுடைய நிலத்திற்கு அருகில் யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதிலே தீயைக்கொளுத்திப் போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர்கள் அந்த நிலத்தில் தீயைக் கொளுத்திப்போட்டார்கள்.
ERVTA   அப்போது அப்சலோம் தனது வேலையாட்களிடம், "பாருங்கள், யோவாபின் வயல் எனது வயலுக்கு அருகிலுள்ளது. அவனது வயலில் பார்லியைப் பயிரிட்டிருக்கிறான். போய் அந்த பார்லி பயிரை எரித்துவிடுங்கள்" என்றான். எனவே அப்சலோமின் வேலையாட்கள் போய் யோவாபின் வயலுக்கு நெருப்புமூட்டினர்.
RCTA   அப்பொழுது அப்சலோம் தன் ஊழியரைப் பார்த்து, "என் வயலுக்கு அருகே யோவாபின் நிலம் இருப்பதும், அதில் வாற்கோதுமை விளைந்திருக்கிறதும் உங்களுக்குத் தெரியுமே. நீங்கள் போய் அதைத் தீக்கு இரையாக்குங்கள்" என்றான். அப்படியே அவர்கள் புறப்பட்டுப் போய்ப் பயிர்களைத் தீக்கு இரையாக்கினர். யோவாபின் வேலைக்காரரோ தம் ஆடைகளைக் கிழித்துக் கொண்டு தலைவரிடம் வந்து, "அப்சலோமின் ஊழியர் உம் நிலத்தின் ஒரு பகுதியைத் தீக்கு இரையாக்கி விட்டனர்" என்று கூறினர்.
ECTA   அப்போது அவன் தன் பணியாளரிடம், கவனியுங்கள், யோவாபின் வயல் என் வயலுக்கு அருகே உள்ளது. அங்கே வாற்கோதுமை விளைந்துள்ளது. நீங்கள் சென்று அதற்கு தீ வையுங்கள் என்றான். அப்சலோமின் பணியாளர் அதற்குத் தீ வைத்தனர்.