Versions
TOV எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று.
IRVTA எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது.
ERVTA எப்பிராயீம் தனது நோயைப் பார்த்தான், யூதா தனது காயத்தை பார்த்தான். எனவே அவர்கள் அசீரியாவிடம் உதவிக்குச் சென்றார்கள். அவர்கள் பேரரசனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொன்னார்கள். ஆனால் அந்த அரசன் உங்களைக் குணப்படுத்த முடியாது. அவன் உங்கள் புண்களை குணப்படுத்த முடியாது.
RCTA எப்பிராயீம் தன் பிணியைக் கண்டுகொண்டான், யூதாவும் தன் காயத்தை உணரலானான்; ஆதலால் எப்பிராயீம் அசீரியாவில் புகலிடம் தேடினான், தன்னைக் காக்கும்படி யூதா பேரரசனைக் கேட்டுக் கொண்டான். ஆனால் உங்களை நலமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.
ECTA எப்ராயிம் தன் பிணியைக் கண்டுகொண்டான்; யூதா தன் காயத்தை உணர்ந்து கொண்டான்; எப்ராயிம் அசீரியாவில் புகலிடம் தேடி, யாரேபு அரசனுக்கு ஆளனுப்பினான். ஆனால், உங்களைக் குணமாக்கவோ, உங்கள் காயங்களை ஆற்றவோ அவனால் இயலாது.