Bible Language

Isaiah 11:15 (AKJV) American King James Version

Versions

TOV   எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார்.
IRVTA   எகிப்தின் சமுத்திரமுனையைக் யெகோவா முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலிமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழு ஆறுகளாகப் பிரித்து, மக்கள் கால் நனையாமல் கடந்துபோகச் செய்வார்.
ERVTA   கர்த்தர் கோபங்கொண்டு எகிப்திலுள்ள கடலை இரண்டாகப் பிளந்தார். இதுபோல, கர்த்தர் தனது கையை ஐபிராத்து ஆற்றின் மேல் அசைப்பார். அவர் ஆற்றை அடித்ததும் அது ஏழு சிறு ஆறுகளாகப் பிரியும். இந்தச் சிறு ஆறுகள் ஆழம் குறைந்தவை. இவற்றில் ஜனங்கள் தம் பாதரட்சைச் கால்களோடு எளிதாக நடந்துபோகலாம்.
RCTA   ஆண்டவர் எகிப்து நாட்டின் வளைகுடாவை முற்றிலும் வற்றச் செய்வார்; வற்றச்செய்யும் காற்றினால் ஆற்றின்மேல் தம் கையை நீட்டுவார்; கால் நனையாமல் மனிதர் கடக்கும்படி அவ்வாற்றை ஏழு கால்வாய்களாய்ப் பிரித்து விடுவார்.
ECTA   எகிப்தின் கடல் முகத்தை ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்; பேராற்றின்மேல் கையசைத்து அனல்காற்று வீசச்செய்வார்; கால்;; நனையாமல் மக்கள் கடந்து வரும்படி அந்த ஆற்றை ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.