Bible Language

Isaiah 38 (AKJV) American King James Version

Versions

TOV   அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
IRVTA   {எசேக்கியாவின் வியாதி} PS அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்தருவாயிலிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரணமடைவீர் என்று யெகோவா சொல்கிறார் என்றான்.
ERVTA   அந்த நேரத்தில், எசேக்கியா சுகவீனம்அடைந்தான். அவன் மரணத்துக்கு சமீபமாயிருந்தான். ஆமோத்சின் மகனான ஏசாயா தீர்க்கதரிசி அவனைப் பார்க்க வந்தான். ஏசாயா அரசனிடம், "இவற்றை உன்னிடம் சொல்லுமாறு கர்த்தர் கூறினார்: நீ விரைவில் மரிப்பாய். எனவே, நீ மரித்தபிறகு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று உனது குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நீ மீண்டும் குணமடையமாட்டாய்!" என்று கூறினான்.
RCTA   அந்நாட்களில் எசேக்கியாஸ் நோய்வாய்ப் பட்டுச் சாகும் நிலையில் இருந்தான்; ஆமோஸ் மகனான இசையாஸ் இறைவாக்கினர் அவனைக் காண வந்து, அவனை நோக்கி, "ஆண்டவர் கூறுகிறார்: உன் வீட்டுக் காரியங்களை ஒழுங்குபடுத்து; ஏனெனில் சாகப் போகிறாய், நீ பிழைக்க மாட்டாய்" என்றார்.
ECTA   அந்நாள்களில், எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, "ஆண்டவர் கூறுவது இதுவே; நீர் உம் வீட்டுக்காரியத்தை ஒழுங்குபடுத்தும்;; ஏனெனில் நீர் சாகப்போகிறீர்; பிழைக்க மாட்டீர்" என்றார்.