Versions
TOV நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
IRVTA {சூலமித்தியாளின் இரவு} PS நான் உறங்கினேன், என் இதயமோ விழித்திருந்தது;
கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்:
என் சகோதரியே! என் பிரியமே!
என் புறாவே! என் உத்தமியே!
கதவைத் திற;
என் தலை பனியினாலும், என் தலைமுடி இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார்.
ERVTA நான் தூங்குகிறேன் ஆனால் என் இதயம் விழித்திருக்கிறது. என் நேசர் தட்டுவதை நான் கேட்கிறேன். "எனக்காகத் திற என் இனியவளே என் அன்பே என் புறாவே, என் மாசற்ற அழகியே என் தலை பனியால் நனைந்துவிட்டது. என் தலைமயிர் இரவின் தூறலால் நனைந்துபோனது."
RCTA தலைமகள்: நான் உறளங்கினேன், ஆயினும் என் இதயம் விழித்திருந்தது. இதோ, என் காதலர் கதவைத் தட்டுகிறார். "கதவைத் திறந்திடுக, என் தங்காய்! என் அன்பே! என் வெண்புறாவே! என் நிறையழகியே! என் தலை பனியால் நனைந்துள்ளது, என் தலைமயிர் இரவின் தூறலால் ஈரமாயுள்ளது" என்கிறார்.
ECTA நான் உறங்கினேன்; என் நெஞ்சமோ விழித்திருந்தது; இதோ, என் காதலர் கதவைத் தட்டுகின்றார்; "கதவைத் திற, என் தங்காய், என் அன்பே, என் வெண்புறாவே, நிறை அழகே, என் தலை பனியால் நனைந்துள்ளது; என் தலைமயிர்ச் சுருள் இரவுத் தூறலால் ஈரமானது.