Versions
TOV மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.
IRVTA மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். யெகோவா பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதால், அவன் இஸ்ரவேல் மக்களைத் தன்னுடைய தேசத்திலிருந்து போகவிடவில்லை. PE
ERVTA எனவே தான், மோசேயும், ஆரோனும் இம்மகா அற்புதங்களைப் பார்வோனுக்கு முன்பாகச் செய்து காட்டினார்கள். இதனாலேயே இஸ்ரவேல் ஜனங்களைத் தனது தேசத்திலிருந்து அனுப்பாதபடி பார்வோனைப் பிடிவாத முள்ளவனாக கர்த்தர் ஆக்கினார்.
RCTA எழுதப்பட்டுள்ள மேற்சொன்ன அதிசயங்களையெல்லாம் மோயீசனும் ஆரோனும் பாரவோன் முன்னிலையில் செய்தனர். ஆனால், ஆண்டவர் பாரவோன் மனத்தைக் கடினப்படுத்தினமையால், அவன், நாட்டைவிட்டுப் போகும்படி இஸ்ராயேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை.
ECTA மோசேயும் ஆரோனும் இவ்வருஞ்செயல்கள் அனைத்தையும் பார்வோன்முன் செய்தனர். ஆண்டவர் பார்வோனின் மனம் இறுகிவிடச் செய்ததால், அவன் இஸ்ரயேல் மக்களைத் தன் நாட்டிலிருந்து போகவிடவில்லை!