Bible Language

Jeremiah 37:3 (AKJV) American King James Version

Versions

TOV   சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னான்.
IRVTA   சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் மகனாகிய யூகாலையும், மாசெயாவின் மகனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம் செய்யவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
ERVTA   சிதேக்கியா அரசன், யூகால் என்ற பெயருடையவனையும் ஆசாரியன் செப்பனியாவையும் ஒரு செய்தியுடன் எரேமியாவிடம் அனுப்பினான். யூகால் செலேமியாவின் மகன். ஆசாரியன் செப்பனியா, மாசெயாவின் மகன். அவர்கள் எரேமியாவிற்குக் கொண்டுவந்த செய்தி: "எரேமியா, எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்."
RCTA   செதேசியாஸ் அரசன் செலேமியாஸ் மகன் யூக்காலையும், மவாசியாஸ் மகன் சோப்போனியாஸ் என்னும் அர்ச்சகரையும் எரெமியாஸ் இறைவாக்கினரிடம் அனுப்பி, "நம் கடவுளாகிய ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று கேட்டுக் கொண்டான்.
ECTA   செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் அனுப்பிவைத்து, "நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்" என்று அவரை வேண்டிக்கொண்டான்.