Bible Language

Luke 3:14 (AKJV) American King James Version

Versions

TOV   போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான்.
IRVTA   போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
ERVTA   வீரர்கள் யோவானை நோக்கி, எங்களைப் பற்றி என்ன? நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டனர். அவர்களுக்கு யோவான், உங்களுக்குப் பணம் தரும்பொருட்டு மக்களை ஒருபோதும் நிர்ப்பந்தப்படுத்தாதீர்கள். யாரைக்குறித்தும் பொய் சொல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறினான்.
RCTA   "நாங்கள் செய்யவேண்டியதென்ன?" 'என்று படை வீரரும் கேட்டனர். அவரோ, "ஒருவரையும் பயமுறுத்திப் பணம் பறிக்கவேண்டாம். பொய்க் குற்றம் சாட்ட வேண்டாம். கிடைக்கும் சம்பளமே போதுமென்றிருங்கள்" என்றார்.
ECTA   படைவீரரும் அவரை நோக்கி, "நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டனர். அவர், "நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்" என்றார்.