Bible Language

Zechariah 10:3 (ASV) American Standard Version

Versions

TOV   மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.
IRVTA   மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது; கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் யெகோவா யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார்.
ERVTA   கர்த்தர் கூறுகிறார்: "நான் மேய்ப்பர்கள் மீது (தலைவர்கள்) கோபமாக இருக்கிறேன். எனது ஆடுகளுக்கு (ஜனங்கள்) என்ன நிகழ்கிறதோ அவற்றுக்கு அத்தலைவர்களைப் பொறுப்பாளர்களாக ஆக்கினேன்." (யூதாவின் ஜனங்கள் தேவனுடைய மந்தை. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உண்மையிலேயே தமது மந்தையைப்பற்றி அக்கறை கொள்வார். ஒரு போர்வீரன் தனது அழகிய போர்க்குதிரையைக் காப்பது போன்று அவர் காப்பார்.)
RCTA   ஆயர்கள் மேல் நாம் சினங்கொண்டோம், வெள்ளாட்டுக் கடாக்களைத் தண்டிப்போம்; சேனைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதாவின் வீட்டாரைக் கண்காணிக்கிறார்; வீரமிகும் போர்க் குதிரைகளைப் போல் அவற்றை ஆக்குவார்.
ECTA   ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது; தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்; அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.