Versions
TOV ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ERVTA "எனது செய்தியை அவர்களுக்கு கொடுப்பதை நான் நிறுத்துவேன். இது அவர்கள் இருட்டில் நடப்பதைப்போன்றது. இது அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வழுக்குகின்ற சாலையைப்போன்றது. அவர்கள் அந்த இருளில் விழுவார்கள். அவர்களுக்கு நான் துரதிர்ஷ்டம் கொண்டு வருவேன். நான் அந்தத் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் தண்டிப்பேன்" இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.