Bible Language

1 Corinthians 12:3 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
IRVTA   ஆதலால், தேவனுடைய ஆவியானவராலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவன் என்று சொல்லமாட்டான் என்றும், பரிசுத்த ஆவியானவரைத்தவிர வேறு ஒருவனும் இயேசுவைக் கர்த்தரென்று சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
ERVTA   தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் இயேசு சபிக்கப்படட்டும் என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் இயேசுவே கர்த்தர் என்பதைக் கூற முடியாது.
RCTA   ஆதலால் உங்களுக்கு நான் அறிவிப்பது: கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் பேசும் போது, ' இயேசுவுக்குச் சாபம்' என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படியே பரிசுத்த ஆவியின் ஏவுதலாலன்றி ' இயேசு ஆண்டவர் ' என்று யாரும் சொல்லமுடியாது.
ECTA   கடவுளின் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டுப் பேசும் எவரும் "இயேசு சபிக்கப்பட்டவர்" எனச் சொல்ல மாட்டார். தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டடவரன்றி வேறு எவரும் "இயேசுவே ஆண்டவர்" எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.