Bible Language

Deuteronomy 1 (ERVTA) Easy to Read version in Tamil Language

Versions

TOV   சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொரு நாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
IRVTA   {ஓரேபைவிட்டுப் புறப்படுவதற்கான கட்டளை} PS சேயீர் மலைவழியாக ஓரேபுக்குப் பதினொரு நாட்கள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து,
ERVTA   இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே அறிவித்தச் செய்தி. யோர்தான் நதிக்குக் கிழக்கில் உள்ள பாலைவனத்தின் பள்ளத்தாக்கில் அவர்கள் இருந்தபொழுது, மோசே அவர்களிடம் சொன்னான். அப்பகுதி சூப்புக்கு எதிராகவும், பாரான் பாலைவனத்திற்கும் தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகிய நகரங்களுக்கு இடையிலும் இருந்தது.
RCTA   இஸ்ராயேலர் யோர்தானுக்குக் ( கீழ்ப் ) புறத்திலே பாலைவனத்தில் செங்கடலை நோக்கும் ஒரு சமவெளியில், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும், மிகுதியான பொன்விளையும் அசெரோட்டுக்கும் நடுப்புறத்திலுள்ள ஓர் இடத்தில் இருக்கும் போது, மோயீசன் அவர்களுடைய முழுச் சபையையும் நோக்கிப் பேசிய வார்த்தைகள் பின்வருமாறு.
ECTA   யோர்தானுக்கு அப்பால் பாரானுக்கும் தோப்பேல், லாபான், அட்சரோத்து, திசகாபு ஆகியவற்றிற்கும் இடையே, சூபுக்குக் கிழக்கே அமைந்த அராபா பாலை நிலத்தில் இஸ்ரயேலர் அனைவருக்கும் மோசே உரைத்த வார்த்தைகள் இவையே.