Versions
TOV கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.
IRVTA யெகோவா சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து: அவரவர்கள் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான். PE
ERVTA கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார்.
பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.
RCTA ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "நீ அவர்கள் சொல்லைக்கேட்டு அவர்களுக்கு ஓர் அரசனை ஏற்படுத்து" என்றார். அப்போது சாமுவேல் மக்களைப் பார்த்து, "அனைவரும் தத்தம் நகருக்குச் செல்லலாம்" என்று கூறினார்.
ECTA ஆண்டவர் சாமுவேலிடம் கூறியது; "அவர் குரலுக்கு செவி கொடுத்து அவர்கள் மீது ஓர் அரசனை ஆளச் செய். பின்பு சாமுவேல் இஸ்ரயேல் மக்களைப் பார்த்து, ஒவ்வொருவரும் தம் நகருக்குச் செல்லட்டும்" என்றார்.