Versions
TOV ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ளவந்தேன் என்றான்.
IRVTA ராஜாவான என்னுடைய ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை மக்களைவிட்டு நிறுத்தக் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படி இந்தக் களத்தை உன்னுடைய கையிலே வாங்க வந்தேன் என்றான்.
ERVTA பின் அர்வனா, "எனது ஆண்டவனும் அரசருமாகிய நீங்கள் ஏன் என்னிடம் வந்தீர்கள்?" என்று கேட்டான். தாவீது அவனுக்கு, "உன்னிடமிருந்து போரடிக்கிற களத்தை வாங்குவதற்கு வந்தேன். அதில் கர்த்தருக்குப் பலிபீடம் அமைக்கமுடியும். அப்படி செய்து நோய் பரவாமல் தடுக்க முடியும்" என்றான்.
RCTA வெளியே வந்து தரையில் முகம் குப்புற விழுந்து பணிந்து அரசரை நோக்கி, "அரசராகிய என் தலைவர் அடியேனிடம் வரவேண்டிய காரணம் என்ன?" என்றான். அதற்குத் தாவீது, "கொள்ளை நோய் மக்களை விட்டு நீங்கும்படி நான் ஆண்டவருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டுவதற்காக இந்தக் களத்தை உன்னிடமிருந்து விலைக்கு வாங்க வந்துள்ளேன்" என்றார்.
ECTA என் தலைவராம் அரசர் உம் அடியானிடம் வருவது ஏன்? என்று அரவுனா வினவ, தாவீது மக்களிடமிருந்து கொள்ளை நோய் விலக ஆண்டவருக்கு ஒரு பலிபீடம் எழுப்பவேண்டும். அதற்காக உன்னிடமிருந்து உன் போரடிக்கின்ற களத்தை விலைக்கு வாங்க வந்தேன்" என்று கூறினார்.