Bible Language

1 Samuel 14:41 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.
IRVTA   அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா வை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு உண்மையை விளங்கச்செய்யும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, மக்களோ தப்பினார்கள்.
ERVTA   அப்பொழுது சவுல், "இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே, உமது தொண்டனுக்கு இன்று ஏன் பதில் சொல்லவில்லை? நானோ அல்லது என் மகனோ பாவம் செய்திருந்தால், ஊரீம்மைத் தாரும். உம்முடைய இஸ்ரவேல் ஜனங்கள் பாவம் செய்திருந்தால் தும்மீம்மைத் தாரும்" என்று ஜெபித்தான். சவுலும் யோனத்தானும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜனங்கள் தப்பினார்கள்.
RCTA   சவுல், இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, இன்று உம் அடியானுக்கு நீர் மறுமொழி சொல்லாதிருப்பது ஏன்? அடையாளம் கொடும். இந்தப் பாவம் என்மேலாவது என் மகன் யோனத்தாசு மேலாவது இருந்தால் அதை விளங்கச் செய்யும்; அல்லது அந்தப் பாவம் உம் மக்கள்மேல் இருந்தால் அவர்களைத் தூயவராக்கும்" என்றார். அப்போது யோனத்தாசும் சவுலும் பிடிபட்டனர்; மக்கள் நீங்கினார்கள்.
ECTA   ஆகவே சவுல், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே! முழு உண்மையை வெளிப்படுத்தும் என்று மன்றாட, யோனத்தான் மீதும் சவுல் மீதும் சீட்டு விழுந்தது; வீரர்களோ தப்பினர்.