Bible Language

Jeremiah 37:17 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
IRVTA   பின்பு சிதேக்கியா ராஜா அவனை வரவழைத்து: யெகோவாவால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டில் இரகசியமாகக் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான்.
ERVTA   பிறகு சிதேக்கியா அரசன் ஒரு ஆளை அனுப்பி அரசனின் வீட்டிற்கு எரேமியாவை அழைத்து வரச் செய்தான். சிதேக்கியா எரேமியாவிடம், தனியாக பேசினான் அவன் எரேமியாவிடம், "கர்த்தரிடமி ருந்து ஏதாவது வார்த்தை வந்திருக்கிறதா?" என்று கேட்டான்.
RCTA   (16) ஒரு நாள் செதேசியாஸ் அரசன் அவரைத் தன்னிடம் கூட்டிவரச் சொல்லி, தன் வீட்டில் தனிமையில், "ஆண்டவர் கூறிய வாக்கு ஏதெனும் உண்டோ?" என்று அவரை வினவினான்; எரெமியாஸ், "ஆம், உண்டு" என்றார். தொடர்ந்து, "நீர் பபிலோனிய அரசனுக்குக் கையளிக்கப்படுவீர்" என்று சொன்னார்.
ECTA   அப்பொழுது அரசன்; செதேக்கியா ஆளனுப்பி, எரேமியாவைத் தன்னிடம் அழைத்து வரச் செய்தான். தன் மாளிகையில் அவருடன் தனியாகப் பேசி, "ஆண்டவரிடமிருந்து வாக்கு ஏதேனும் உண்டா?" என்று வினவினான். அதற்கு எரேமியா, "ஆம், உண்டு. பாபிலோனிய மன்னனிடம் நீர் கையளிக்கப்படுவீர்" என்றார்.