Versions
TOV கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA வழக்கமாக பொய் பேசுகிறவர்கள் நடுவில் குடியிருக்கிறாய்; பொய்யின்காரணமாக அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது. பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன. ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்" என்று கர்த்தர் கூறினார்.
RCTA கொடுமைக்கு மேல் கொடுமையும், வஞ்சனைக்கு மேல் வஞ்சனையும் செய்கிறார்கள்; என்னை அறிந்து கொள்ள மறுக்கிறார்கள், என்கிறார் ஆண்டவர்.
ECTA நீயோ வஞ்சனை செய்வார் நடுவில் வாழ்கின்றாய்; தங்கள் வஞ்சனையின் காரணமாக என்னை அவர்கள் அறிந்து கொள்ள மறுக்கின்றார்கள், என்கிறார் ஆண்டவர்.