Bible Language

John 20:15 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
IRVTA   இயேசு அவளைப் பார்த்து: பெண்ணே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரன் என்று நினைத்து: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போயிருந்தால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்வேன் என்றாள்.
ERVTA   இயேசு அவளிடம், பெண்ணே! ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்? என்று கேட்டார். மரியாள் அவரை, அந்தத் தோட்டத்தின் காவல் காரனாக இருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். எனவே அவள் அவரிடம், ஐயா, நீங்களா இயேசுவின் சரீரத்தை எடுத்துக் கொண்டு போனீர்கள்? அவரை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். நான் போய் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றாள்.
RCTA   இயேசு அவளை நோக்கி, "அம்மா, ஏன் அழுகிறாய் ? யாரைத் தேடுகிறாய் ?" என்று கேட்டார். அவளோ அவரைத் தோட்டக்காரன் என்றெண்ணி அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக்கொண்டு போயிருந்தால் எங்கு வைத்தீர் ? சொல்லும். நான் அவரை எடுத்துச்செல்வேன்" என்றாள்.
ECTA   இயேசு அவரிடம், "ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?" என்று கேட்டார். மரியா அவரைத் தோட்டக்காரர் என்று நினைத்து அவரிடம், "ஐயா, நீர் அவரைத் தூக்கிக் கொண்டு போயிருந்தால் எங்கே வைத்தீர் எனச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்" என்றார்.