Bible Language

Numbers 21:3 (HCSB) Holman Christian Standard Bible

Versions

TOV   கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள்.
IRVTA   யெகோவா இஸ்ரவேலின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியர்களை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்களுடைய பட்டணங்களையும் அழித்து, அந்த இடத்திற்கு ஓர்மா * அழிவு என்று பெயரிட்டார்கள். PS
ERVTA   இஸ்ரவேல் ஜனங்களின் வேண்டுதலைக் கர்த்தர் கேட்டார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை வெல்வதற்கு கர்த்தர் உதவி செய்தார். இஸ்ரவேல் ஜனங்கள் கானானியர்களை முழுமையாக அழித்தனர். அவர்களின் நகரங்களும் அழிக்கப்பட்டன. எனவே அந்த இடத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டனர்.
RCTA   ஆண்டவர் இஸ்ராயேலரின் மன்றாட்டைக் கேட்டருளி, கானானையரை அவர்களுடைய கையிலே ஒப்புவித்தார். அப்பொழுது இஸ்ராயேலர் அவர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அழித்து, அவ்விடத்திற்கு ஓர்மா, அதாவது: சபிக்கப்பட்ட ஊர் என்று பெயரிட்டார்கள்.
ECTA   அவ்வாறே ஆண்டவர் இஸ்ரயேலின் குரலைக் கேட்டுக் கானானியரை ஒப்படைத்தார்; அவர்கள் அவர்களையும் அவர்கள் நகர்களையும் அழித்தனர்; எனவே அந்த இடத்தின் பெயர் "ஓர்மா" என்று வழங்கியது.