Bible Language

Isaiah 37:21 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.
IRVTA   {சனகெரிப்பின் வீழ்ச்சி} PS அப்பொழுது ஆமோத்சின் மகனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்செய்தாயே.
ERVTA   பிறகு ஆமோத்சின் மகனான ஏசாயா எசேக்கியாவிற்குச் செய்தி அனுப்பினான். ஏசாயா, "இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுவது என்னவென்றால், அசீரியா அரசனாகிய சனகெரீப்பிடமிருந்து வந்த செய்தியைப் பற்றி நீ ஜெபம் செய்தாய். "நான் உனது ஜெபத்தைக் கேட்டேன்.
RCTA   அப்போது ஆமோஸ் மகனான இசையாஸ் எசேக்கியாசுக்கு இவ்வாறு சொல்லியனுப்பினார்: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுகிறார்: அசீரியாவின் அரசனான சென்னாக்கெரிபின் காரணமாய் நீ நம்மிடம் மன்றாடினதைக் கேட்டோம்;
ECTA   அப்போது, ஆமோட்சின் மகன் எசாயா எசேக்கியாவுக்கு இவ்வாறு சொல்லயனுப்பினார்; இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "அசீரிய மன்னன் சனகெரிபை முன்னிட்டு நீ என்னை நோக்கி மன்றாடினாய்.