Bible Language

Psalms 14:7 (IRVTA) Indian Revised Version - Tamil

Versions

TOV   சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.
IRVTA   சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக;
யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது,
யாக்கோபுக்குச் சந்தோஷமும்,
இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். PE
ERVTA   சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ர வேலைக் காப்பாற்ற முடியும். கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்! கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர். ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார். அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
RCTA   சீயோனிலிருந்து இஸ்ராயேல் மக்களுக்கு மீட்பு வராதோ! ஆண்டவர் தம் மக்களுக்கு நல்ல வாழ்வு அளிக்கும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வர், இஸ்ராயேல் மக்கள் அகமகிழ்வர்.
ECTA   சீயோனிலிருந்து இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக! ஆண்டவர் தம் மக்களுக்கு மீண்டும் வளமான வாழ்வை அருளும்போது, யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக! இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!