Versions
TOV தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
IRVTA தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
ERVTA தாவீது தப்பித்து ராமாவில் தங்கியிருந்த சாமுவேலிடம் போனான். தனக்கு சவுல் செய்தக் காரியங்கள் அனைத்தையும் சாமுவேலிடம் சொன்னான். பிறகு இருவரும் தீர்க்கதரிசிகள் தங்கி இருக்கிற முகாம்களுக்குச் சென்றனர். தாவீது அங்கேயே தங்கினான்.
RCTA தாவீது தப்பியோடி ராமாத்தாவிலிருந்த சாமுவேலிடம் வந்து சவுல் தனக்குச் செய்தவற்றை எல்லாம் அவருக்குச் சொன்னான். அப்பொழுது அவனும் சாமுவேலும் போய் நயோத்தில் தங்கியிருந்தனர்.
ECTA அப்பொழுது தாவீது அங்கிருந்து தப்பி ஓடி இராமாவில் இருந்த சாமுவேலிடம் வந்து, சவுல் தமக்கு செய்த யாவற்றையும் கூறினார். பின்னர் அவரும் சாமுவேலும் நாவோத்துக்குச் சென்று தங்கினர்.