Bible Language

2 Chronicles 24:20 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
IRVTA   அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் மகனான சகரியாவின்மேல் இறங்கினதால், அவன் மக்களுக்கு எதிரே நின்று: நீங்கள் யெகோவாவுடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதனால் நீங்கள் செழிப்படையமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் யெகோவாவை விட்டுவிட்டதால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.
ERVTA   தேவனுடைய ஆவி சகரியா மீது வந்தது. சகரியாவின் தந்தை ஆசாரியனாகிய யோய்தா ஆவான். சகரியா ஜனங்களின் முன்பு நின்று, "தேவன் சொல்வது இதுதான்: ‘நீங்கள் ஏன்" கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கின்றீர்கள்? நீங்கள் வெற்றியடையமாட்டீர்கள். நீங்கள் கர்த்தரைவிட்டு விலகிவிட்டீர்கள். எனவே கர்த்தரும் உங்களை விட்டு விலகிவிட்டார்!" என்றான்.
RCTA   ஆகவே ஆண்டவரின் ஆவி குரு யோயியாதாவின் மகன் சக்கரியாசின் மேல் இறங்கினது. இவர் மக்களுக்கு முன் நின்று அவர்களை நோக்கி, "கடவுளாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'நீங்கள் ஆண்டவரின் கற்பனைகளை மீறுவது ஏன்? அதனால் உங்களுக்கு நன்மை ஒன்றும் வராது. நீங்கள் ஆண்டவரைப் புறக்கணித்ததால் ஆண்டவரும் உங்களைப் புறக்கணிப்பார்' என்பதாம்" என்றார்.
ECTA   அப்போது கடவுளின் ஆவி குரு யோயாதாவின் மகன் செக்கரியாவின்மேல் இறங்கியது; அவர் மக்கள்முன் நின்று அவர்களை நோக்கி; "இதோ, கடவுள் கூறுகிறார்; ஆண்டவரின் கட்டளைகளை மீறுவதேன்? அதனால் நீங்கள் வாழ்வில் முன்னேற மாட்டீர்களே! ஆண்டவரை நீங்கள் புறக்கணித்ததால், அவரும் உங்களைப் புறக்கணித்துள்ளார்" என்று கூறினார்.