Bible Language

2 Samuel 19:8 (KJV) King James Version

Versions

TOV   அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.
IRVTA   அப்பொழுது ராஜா எழுந்துபோய், நகரவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா நகரவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, மக்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலர்களோ தங்களுடைய வீடுகளுக்கு ஓடிப்போனார்கள்.
ERVTA   அப்போது அரசன் நகரவாயிலுக்குச் சென்றான். அரசன் வாயிலருகே வந்துள்ளான் என்ற செய்தி பரவியது. எனவே எல்லோரும் அரசனைக் காண வந்தனர். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் வீடுகளுக்கு ஓடிப்போய் விட்டனர்.
RCTA   அதைக் கேட்ட அரசர் எழுந்து வாயிலில் அமர்ந்தார். "அரசர் வாயிலில் அமர்ந்திருக்கிறார்" என்று எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்படவே, மக்கள் திரள் திரளாய் அரசர் முன்னிலையில் வந்து கூடினார்கள். இஸ்ராயேல் மனிதர்களோ தத்தம் கூடாரங்களுக்கு ஓடினார்கள்.
ECTA   அரசர் எழுந்து வாயிலில் அமர, "இதோ அரசர் வாயிலில் அமர்ந்துள்ளார் என்று அனைவருக்கும் சொல்லப்பட்டது. வீரர்கள் அனைவரும் அவர் முன் வந்தனர். இதற்கிடையில் இஸ்ரயேலர் தம் வீடுகளுக்குத் தப்பியேடினர்.