Bible Language

Jeremiah 47:3 (KJV) King James Version

Versions

TOV   அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.
IRVTA   அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை சோர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பார்க்காதிருப்பார்கள்.
ERVTA   "அவர்கள் ஓடுகின்ற குதிரைகளின் ஓசையைக் கேட்பார்கள். அவர்கள் இரதங்களின் ஓசையைக் கேட்பார்கள். அவர்கள் சக்கரங்களின் இரைச்சலையும் கேட்பார்கள். தந்தைகளால் பிள்ளைகளைக் காப்பாற்ற முடியாமல் போகும். அவர்கள் உதவ முடியாமல் மிகவும் பலவீனமாவார்கள்.
RCTA   அவர்களுடைய போர்க் குதிரைகளின் குளம்பொலியையும், தேர்ப்படையின் கடகடப்பையும், உருளைகளின் இரைச்சலையும் கேட்டு அஞ்சுவார்கள்; தந்தையர் தங்கள் கைகள் சோர்ந்தமையால், தங்கள் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்;
ECTA   போர்க் குதிரைகளின் குளம்பொலியையும் தேர்களின் இரைச்சலையும் அவற்றின் உருளை ஓசையையும் கேட்டு, தந்தையர் கை சோர்ந்தமையால் தம் குழந்தைகளையும் திரும்பிப் பார்க்கமாட்டார்கள்.