Versions
TOV அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
IRVTA அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும்,
நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது;
அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்
என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
ERVTA நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள், "இஸ்ரவேலின் ஜனங்களுக்குக் கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!" என்பார்கள்.
RCTA அப்போது நம் உதடுகளில் சிரிப்பு ஒலித்தது, நாவில் மகிழ்ச்சிக் கீதமும் எழும்பியது: 'ஆண்டவர் அவர்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்தார்!' என்று அப்போது மக்களினத்தார் பேசிக் கொண்டனர்.
ECTA அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது; "ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்" என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.