Bible Language

Isaiah 66:2 (KJV) King James Version

Versions

TOV   என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
IRVTA   என்னுடைய கரம் இவைகளையெல்லாம் படைத்ததினால் இவைகளெல்லாம் உண்டானது என்று யெகோவா சொல்கிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
ERVTA   நானே எனக்கு இவற்றையெல்லாம் அமைத்துக்கொள்ள வேண்டும். அனைத்தும் இங்கே உள்ளன. ஏனென்றால், நான் இவற்றைப் படைத்தேன். கர்த்தர்தாமே இவற்றைக் கூறினார். "எனக்கு சொல், நான் எந்த ஜனங்களைப் பாதுகாக்கவேண்டும். ஏழைகளையும், துயரப்படுபவர்களையும் பாதுகாக்கிறேன். எளியவர்களுக்காகவும், துயரப்படுபவர்களுக்காகவும் பொறுப்பேற்கிறேன். எனது வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகிற ஜனங்களை நான் பாதுகாக்கிறேன்.
RCTA   இவற்றையெல்லாம் நமது கையே படைத்தது; இவையனைத்தும் நம்மால் உண்டாக்கப்பட்டவை, என்கிறார் ஆண்டவர். உள்ளம் வருந்தி, நம் சொற்களுக்கு அஞ்சி நடுங்குகிற எளியவனுக்கன்றி வேறெவனுக்கு இரக்கம் காட்டுவோம்?
ECTA   இவை அனைத்தையும் என் கைகளே உண்டாக்கின; இவை யாவும் என்னால் உருவாகின, என்கிறார் ஆண்டவர். எளியவரையும், உள்ளம் வருந்துபவரையும், என் சொல்லுக்கு அஞ்சுபவரையும் நான் கண்ணோக்குவேன்.