Bible Language

2 Chronicles 34:28 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளபட. நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள்.
IRVTA   இதோ, நான் இந்த இடத்தின்மேலும் இதன் மக்களின்மேலும் வரச்செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்க்கப்பட நான் உன்னை உன் முன்னோர்களுக்கு அருகில் சேரச்செய்வேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள். PEPS
ERVTA   உன் முற்பிதாக்களுடன் இருப்பதற்கு நான் உன்னை அழைத்துச் செல்வேன். நீ உனது கல்லறைக்கு சமாதானத்தோடு போவாய். அதனால் நான் இந்த இடத்துக்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் கொடுக்கப்போகும் பயங்கரமான துன்பங்களை நீ காணமாட்டாய்’" என்றார். இல்க்கியாவும், அரசனின் வேலைக்காரர்களும் இந்த செய்தியை யோசியா அரசனிடம் கொண்டுவந்தனர்.
RCTA   நாம் சில நாட்களுக்குள் உன்னை உன் மூதாதையர் அருகே சேர்ப்போம். சமாதானத்துடன் நீ கல்லறைக்குப் போவாய். நாம் இந்நகரின் மேலும், அதன் குடிகளின் மேலும் வரச்செய்யும் எல்லாத் தீமைகளையும் நீ உன் கண்களால் காணப்போகிறதில்லை" என்றான். தூதர்களோ திரும்பி வந்து அவள் சொன்னதையெல்லாம் அரசனுக்கு அறிவித்தனர்.
ECTA   ஆதலால், இவ்விடத்தின் மீதும் இதில் வாழ்வோர் மீதும் நான் வரச் செய்யவிருக்கும் அனைத்துத் தீமைகளையும் உன் கண்கள் காணாதபடி உன்னை உன் மூதாதையர் இருக்கும் இடத்தில் கொண்டு சேர்ப்பேன்; நீயும் மன அமைதியுடன் உன் கல்லறைக்குச் செவ்வாய்" என்றாள். அவர்கள் திரும்பிச் சென்று அரசருக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர்.