Bible Language

2 Kings 6:18 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.
IRVTA   அவர்கள் அவனிடத்தில் வரும்போது, எலிசா யெகோவாவை நோக்கி விண்ணப்பம்செய்து: இந்த மக்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படிச் செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகச் செய்தார்.
ERVTA   பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்துநின்றதும், அவன் கர்ததரிடம், "இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்" என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார்.
RCTA   எதிரிகள் அவரை அணுகி வந்தனர். அதைக் கண்டு எலிசேயு ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே, இம் மக்கள் எல்லாரையும் குருடராக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசேயுவின் மன்றாட்டுக்கு இரங்கி அவர்களைக் குருடராக்கினார்.
ECTA   சிரியா நாட்டினர் அவரை நெருங்கி வந்த பொழுது, எலிசா ஆண்டவரை நோக்கி, "இவ்வினத்தாரைக் குருடாக்கியருளும்" என்று மன்றாடினார். உடனே ஆண்டவர் எலிசாவின் மன்றாட்டுக்கு இணங்கி அவர்களைக் குருடாக்கினார்.