Versions
TOV சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
IRVTA சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்: செயல்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் யெகோவா உரைக்கிறார் என்று சொல் என்றார். PE
ERVTA சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறிக் கொண்டிருக்கிறார். செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேலே, நீ என்னுடைய வேலைக்காரன். நான் உன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். அந்நேரத்தில், நான் உன்னை முத்திரை மோதிரமாகச் செய்வேன். நான் இவற்றைச் செய்திருக்கிறேன் என்பதற்கு நீயே அத்தாட்சியாக இருப்பாய்!" என்று சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொன்னார். முத்திரை மோதிரம் மோதிரத்தில் சொந்தக்காரரின் பெயர் அல்லது அடையாளம் இருக்கும். இதனை களிமண் அல்லது மெழுகில் அழுத்துவார் கள். இதன் மூலம் இந்தப் பொருள், மோதிரத்தை உடையவருக்குச் செந்தமானது என்பதை நிருபிக்கும்.
RCTA (22) சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: அந்நாளில், சலாத்தியேலின் மகனான நம் ஊழியன் சொரொபாபெலாகிய உன்னைத் தேர்ந்தெடுப்போம், என்கிறார் ஆண்டவர்; உன்னை அரச கணையாழியாய்ச் செய்வோம்; ஏனெனில் உன்னையே நாம் தேர்ந்துகொண்டோம், என்கிறார் சேனைகளின் ஆண்டவர்."
ECTA படைகளின் ஆண்டவர் கூறுகிறார்; 'அந்நாளில் செயல்தியேலின் மகனும் என் ஊழியனுமான செருபாபேலே! உன்னைத் தேர்ந்தெடுப்பேன்,' என்கிறார் ஆண்டவர். 'உன்னை என் அரச இலச்சினையாய் அணிந்துகொள்வேன். ஏனெனில் உன்னையே நான் தெரிந்து கொண்டேன்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்."