Versions
TOV சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
IRVTA சகல தேசங்களின்மேலும் யெகோவாவுடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களை அழிவிற்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
ERVTA எல்லா நாடுகளின்மீதும், அவற்றிலுள்ள படைகளின் மீதும் கர்த்தர் கோபத்தோடு இருக்கிறார். அவர்கள் அனைவரையும் கர்த்தர் அழிப்பார். அவர்கள் அனைவரும் கொல்லப்படுவதற்கு அவர் காரணமாக இருப்பார்.
RCTA ஏனெனில் ஆண்டவரின் கோபம் எல்லா மக்களினங்கள் மேலும் விழும், அவருடைய ஆத்திரம் அவர்களுடைய படைகள் அனைத்தின் மேலும் விழும். அவர்களை அவர் கொன்று போடுவார், அவர்களைப் படுகொலைக்குக் கையளிப்பார்.
ECTA வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்; அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்; அவர்களை அவர் அடியோடு அழிப்பார்; அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.