Bible Language

Judges 16:30 (KJVP) King James Version with Strong Number

Versions

TOV   என் ஜீவன் பெலிஸ்தரோடேகூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள்.
IRVTA   என்னுடைய ஜீவன் பெலிஸ்தர்களோடு மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா மக்கள்மேலும் விழுந்தது; இப்படி அவன் உயிரோடிருக்கும்போது அவனால் கொல்லப்பட்டவர்களைவிட, அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாக இருந்தார்கள்.
ERVTA   சிம்சோன், "என்னையும் இந்த பெலிஸ்தியர்களுடன் மரிக்கவிடும்" என்றான். பின்பு அத்தூண்களைப் பலங்கொண்டமட்டும் தள்ளினான். தலைவர்கள் மீதும், அதிலிருந்த ஜனங்கள்மீதும் கோவில் இடிந்து விழுந்தது. இவ்வாறு உயிரோடிருந்தபோது கொன்றதைக் காட்டிலும் அதிகமான பெலிஸ்தியரைச் சிம்சோன் மரித்தபோது கொன்றான்.
RCTA   பிலிஸ்தியரோடு நானும் சாகக்கடவேன்" என்று கூறித் தூண்களை வன்மையுடன் அசைக்கவே, வீடு இடிந்து மக்கட் தலைவர்கள் மேலும், அங்கு இருந்த மற்றவர்மேலும் விழுந்தது. இவ்வாறு சாம்சன் வாழ்ந்த காலத்தில் அவனால் கொல்லப்பட்டவரை விட, அவன் சாகும் போது கொல்லப்பட்டவரே அதிகம்.
ECTA   சிம்சோன், "என் உயிர் பெலிஸ்தியருடன் மடியட்டும்" என்று சொல்லிக்கொண்டு முழு வலிமையுடன் சாய்ந்தார். வீடு சிற்றரசர் மீதும், அதனுள் இருந்த அனைத்து மக்கள் மீதும் சரிந்து விழுந்தது. இவ்வாறு, அவர் உயிரோடு இருந்தபோது கொன்றதைவிட, மிகுதியான பேரை அவர் சாகும்போது கொன்றார்.