Versions
TOV அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.
IRVTA அப்பொழுது அவனுடைய மனைவியாகிய சிரேஷூம் அவனுடைய நண்பர்கள் எல்லோரும் அவனைப் பார்த்து: ஐம்பது முழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயைத் தூக்கிப்போடும்படி நாளையதினம் நீர் ராஜாவிற்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாக ராஜாவுடன் விருந்திற்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாகத் தெரிந்ததால் தூக்குமரத்தைச் செய்தான். PE
ERVTA பிறகு ஆமானின் மனைவி சிரேஷ் மற்றும் நண்பர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். அவர்கள், "யாராவது ஒருவரை அவனைத் தூக்கிலிட கம்பம் கட்டச் சொல். அதனை 75 அடி உயரமுள்ளதாகச் செய். பிறகு, காலையில் மொர்தெகாயை அதில் தூக்கில் போடுமாறு அரசனை கேள். பிறகு, அரசனோடு விருந்துக்குப் போ. அப்போது உன்னால் மகிழ்ச்சியோடு இருக்கமுடியும்" என்றனர். ஆமான் இக்கருத்தை விரும்பினான். எனவே, அவன் சிலரிடம் தூக்கு மரக் கம்பம் செய்யுமாறு கட்டளையிட்டான்.
RCTA அப்பொழுது அவன் மனைவி ஜாரேசும் ஏனைய நண்பர்களும் அவனை நோக்கி, "நீர் ஐம்பது முழ உயரமான ஒரு பெரிய தூக்கு மரத்தைத் தயார் செய்யுமாறு கட்டளையிட வேண்டும். அதிலே மார்தொக்கேயைக் கட்டித் தொங்க விட நாளைக் காலையிலேயே அரசரிடம் உத்தரவு பெற்றுக் கொண்ட பின்னர் மகிழ்ச்சியோடு அரசரோடு விருந்திற்குப் போகவும்" என்றனர். இந்த யோசனை ஆமானுக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே அவன் உயர்ந்ததொரு தூக்கு மரத்தைத் தயார் செய்யக் கட்டளை இட்டான்.
ECTA (13) இதைக் கேட்ட அவன் மனைவி செரோசும், நண்பர்களும் அவனை நோக்கி, ஐம்பது முழு உயரத் தூக்கு மரம் செய்து, நாளை மன்னரிடம் கூறி மொர்தக்காயை அதில்,தூக்கிலிட்டுப் பின்னர் அரசருடன் விருந்துண்டு மகிழச் செல்லும் என்றனர். இவ்வார்த்தை ஆமானுக்கு நலமெனப்பட்டதால் அவன் தூக்குமரம் ஒன்று செய்வித்தாள்.