Versions
TOV கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது.
IRVTA யெகோவா யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இல்லாதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த இடம் இந்த நாள்வரைக்கும் கில்கால் ‡ புரட்டிப்போடுதல் எனப்படுகிறது.
ERVTA அப்போது, கர்த்தர் யோசுவாவிடம், "நீங்கள் அனைவரும் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். அது உங்களை வெட்கமடையச் செய்தது. ஆனால் இன்று நான் அவ்வெட்கத்தைப் போக்கிவிட்டேன்" என்றார். எனவே யோசுவா அவ்விடத்திற்குக் கில்கால் எனப் பெயரிட்டான். இன்றளவும் அந்த இடம் கில்கால் என்றே அழைக்கப்படுகிறது.
RCTA அப்போது ஆண்டவர் யோசுவாவை நோக்கி, "உங்கள் மேல் இருந்த எகிப்தின் பழியை இன்று நாம் நீக்கி விட்டோம்" என்றார். எனவே, அந்த இடம் இன்று வரை கல்கலா என அழைக்கப்பட்டு வருகிறது.
ECTA ஆண்டவர் யோசுவாவிடம், "இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்" என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வரை"கில்கால்" என்று அழைக்கப்படுகின்றது.