Versions
TOV ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார்.
IRVTA {எருசலேமின் மேல் தேவனுடைய கோபம்} PS ஐயோ, ஆண்டவர் தமது கோபத்தில் மகளாகிய சீயோனை கரும்மேகத்தினால் மூடினார்;
அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினைக்காமல்
இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமியிலே விழச்செய்தார்.
ERVTA கர்த்தர் சீயோன் மகளை ஒரு மேகத்தின் கீழ் எவ்வாறு மூடி வைத்திருக்கிறார் என்பதை பார். அவர் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து பூமிக்கு எறிந்திருக்கிறார். கர்த்தர் அவரது கோப நாளில் இஸ்ரவேல் அவரது பாதபீடம் என்பதை தன் மனதில் வைக்கவில்லை.
RCTA இரண்டாம் புலம்பல்: ஆலேஃப்: ஆண்டவர் தமது ஆத்திரத்தில், சீயோன் மகளை இருளால் மூடினாரே! இஸ்ராயேலின் மகிமையை வானினின்று தரைமட்டும் அவர் தாழ்த்தி விட்டார்; அவருக்குக் கோபம் வந்த போது தம் கால்மணையை முற்றிலும் மறந்து விட்டார்.
ECTA ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர் தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்! அவர் இஸ்ரயேலின் மேன்மையை விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்! அவரது சினத்தின் நாளில் தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை!