Bible Language

2 Kings 8 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழு வருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
IRVTA   {சூனேமியாளின் நிலம் மீட்கப்படுதல்} PS எலிசா தான் உயிரோடு எழுப்பின சிறுவனின் தாயை நோக்கி: நீ உன் குடும்பத்தாரோடு எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாவது போய் தங்கியிரு; யெகோவா பஞ்சத்தை வரச்செய்வார்; அது ஏழுவருடங்கள் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான்.
ERVTA   எலிசா தன்னால் உயிர்தரப்பட்ட பிள்ளையின் தாயுடன் பேசிக்கொண்டிருந்தான். அவன், "நீயும் உனது குடும்பத்தாரும் இன்னொரு நாட்டிற்குப் போகவேண்டும். ஏனென்றால் கர்த்தர் இங்கு பஞ்ச காலத்தை உருவாக்க தீர்மானித்துள்ளார். இந்நாட்டில் இப்பஞ்சம் ஏழு ஆண்டுகளுக்கு இருக்கும்" என்றான்.
RCTA   எலிசேயு ஒரு பெண்ணின் மகனுக்கு உயிர் கொடுத்திருந்தார். அவர் அப்பெண்ணை நோக்கி, "நீயும் உன் குடும்பத்தாரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான ஓர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில், ஆண்டவர் நாட்டில் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது ஏழாண்டு வரை நீடிக்கும்" என்று சொன்னார்.
ECTA   எலிசா தாம் உயிர்ப்பித்துக் கொடுத்த சிறுவனின் தாயான பெண்ணை நோக்கி, "நீயும் உன் குடும்பத்தினரும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு உங்களுக்கு வசதியான வேறோர் இடத்தில் தங்கியிருங்கள். ஏனெனில் ஆண்டவர் பஞ்சத்தை வருவித்துள்ளார். அது நாட்டில் ஏழாண்டுகள் நிலைத்திருக்கும்" என்றார்.