Versions
TOV மேலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பரநூலினாலும் சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய்.
IRVTA “மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும், இளநீலநூலினாலும், இரத்தாம்பரநூலினாலும், சிவப்பு நூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் ஆசரிப்பு கூடாரத்தை உண்டாக்கு; அவைகளில் விசித்திர பின்னல்வேலையாகக் கேருபீன்களைச் செய்.
ERVTA கர்த்தர் மோசேயை நோக்கி, "பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய நூல்களால் நெய்யப்படவேண்டும். ஒரு திறமை வாய்ந்த ஓவியன் இத்திரைச் சீலையில் சிறகுகளுள்ள கேரூபீன்களின் ஓவியங்களை நெய்ய வேண்டும்.
RCTA ஆசாரக் கூடாரத்தை அமைக்க வேண்டிய மாதிரி என்னவென்றால், முறுக்கிழையான மெல்லிய சணல் நூல்களாலும், நீலநிறம், இரத்த நிறம், இரு தடவை சாயம் தோய்த்த பொன்னிறமுள்ள நூல்களாலும் நெய்யப்பட்ட புடவையைக் கொண்டு பத்து மூடுதிரைகளைச் செய்வித்து, அவை சித்திர விசித்திரப் பின்னல் வேலையால் அலங்கரிக்கப்படும்.
ECTA மேலும் திருஉறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய். அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்பட வேண்டும். அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.