Bible Language

Galatians 2:16 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
IRVTA   நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
ERVTA   சட்டங்களின் விதி முறைகளை ஒருவன் பின்பற்றுவதினாலேயே தேவனுக்கு வேண்டியவனாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவின் மீது எவன் நம்பிக்கை வைக்கிறானோ அவனே தேவனுக்கு வேண்டியவனாகிறான். எனவே, நாம் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். நாம் சட்டங்களைப் பின்பற்றுவதால் அல்ல, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதாலேயே தேவனுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம். இது உண்மை. ஏனென்றால் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் எவரொருவரும் தேவனுக்கு வேண்டியவராக முடியாது.
RCTA   எனினும், திருச்சட்டம் விதிக்கும் செயல்களால் அன்று, இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் மட்டுமே ஒருவன் இறைவனுக்கு ஏற்புடையவன் ஆகக் கூடும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆகவே தான் நாமும் திருச்சட்டம் விதித்த செயல்களாலன்று, கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தால் இறைவனுக்கு ஏற்புடையவராகும்படி, கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் கொண்டோம்; ஏனெனில், திருச் சட்டம் விதித்த செயல்களால் எந்த மனிதனும் இறைவனுக்கு ஏற்புடையவனாவதில்லை.
ECTA   எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை.