Versions
TOV அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது.
IRVTA அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, மகிழ்ச்சியாக எழும்பி ஆர்ப்பரி; கணவன் உள்ளவளைவிட மலடியான பெண்ணுக்கே அதிக பிள்ளைகள் உண்டு என்று எழுதியிருக்கிறது.
ERVTA கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது. பிள்ளை பெறாத மலடியே! மகிழ்ச்சியாய் இரு. எப்போதும் நீ குழந்தை பெறாதவள். உனக்குப் பிரசவ வேதனை என்னவெனத் தெரியாது. அதனால் நீ மகிழ்ச்சியுடன் சத்தமிடு. கணவனுள்ள பெண்ணைவிட தனியாக இருக்கிற பெண்ணுக்கே அதிகப் பிள்ளைகள் உண்டு. ஏசாயா 54:1
RCTA ஏனெனில், 'பிள்ளை பெறாத மலடியே மகிழ்வாயாக! பேறுகால வேதனையுறாதவளே, துள்ளிக் குதித்து ஆர்ப்பரிப்பாயாக! வாழ்க்கைப்பட்டவளின் மக்களைவிட கைவிடப்பட்டவளின் மக்களே மிகப் பலர்' என்று எழுதியுள்ளது.
ECTA ஏனெனில், "பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்து பாடு! பேறுகால வேதனை அறியாதவளே, அக்களித்துப் பாடி முழங்கு! ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனோடு வாழ்பவளின் பிள்ளைகளைவிட ஏராளமானவர்கள்" என்று மறைநூலில் எழுதியுள்ளது.