Bible Language

Isaiah 14:22 (LITV) Literal Translation of the Holy Bible

Versions

TOV   நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பெளத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   நான் அவர்களுக்கு விரோதமாக எழும்புவேன் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்; பாபிலோனுடைய பெயரையும், அதில் மீதியாக இருக்கிறதையும், சந்ததியையும் பின்சந்ததியையும் அழிப்பேனென்று யெகோவா சொல்கிறார்.
ERVTA   சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறினார், "அந்த ஜனங்களுக்கு எதிராக நான் நின்று சண்டையிடுவேன். புகழ்பெற்ற நகரமான பாபிலோனை நான் அழிப்பேன். பாபிலோனிலுள்ள அனைத்து ஜனங்களையும் நான் அழிப்பேன். அவர்களின் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான் அழிப்பேன்" என்றார்.இவை அனைத்தையும் கர்த்தர் தாமே கூறினார்.
RCTA   சேனைகளின் ஆண்டவர் கூறுகிறார்: "அவர்களுக்கு எதிராக நாம் கிளம்புவோம்; பபிலோனின் பெயரையும், அங்கே எஞ்சியிருப்போரையும், வழித் தோன்றல்களையும் சந்ததியையும் அழிப்போம் என்கிறார் ஆண்டவர்.
ECTA   "அவர்களுக்கு எதிராக நான் கிளர்ந்தெழுவேன்" என்கிறார் படைகளின் ஆண்டவர், "பாபிலோனின் பெயரையும் அங்கே எஞ்சியிருப்போரையும், வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும் இல்லாதொழிப்பேன், "என்கிறார் ஆண்டவர்.