Versions
TOV அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங்காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.
IRVTA அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவனுடைய வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்கும் காணாததால், சாமுவேலிடத்திற்குப் போனோம் என்றான்.
ERVTA அப்போது சவுலின் சிறிய தகப்பன் சவுலிடமும் அவனது வேலைக்காரனிடமும், "நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?" எனக் கேட்டான். "நாங்கள் கழுதைகளைத் தேடிப் போனோம். கிடைக்காததால் சாமுவேலை சந்திக்கச் சென்றோம்" என்றான்.
RCTA சவுலுடைய சிற்றப்பன் அவரையும் அவர் ஊழியனையும் கண்டு, "நீங்கள் எங்கே போனீர்கள்?" என்று கேட்டான். அவர்கள், "கழுதை தேடப்போனோம்; அவற்றைக் காணாததால் சாமுவேலிடம் போனோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.
ECTA அப்போது சவுலின் சிற்றப்பன், சவுலையும் அவர் வேலைக் காரனையும் நோக்கி, "நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்? என்று வினவ, அவர், நாங்கள் கழுதைகளைத் தேடிச் சென்றோம். அவை கிடைக்கவில்லை. எனவே சாமுவேலிடம் சென்றோம்" என்று சொன்னார்.