Bible Language

Malachi 2:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.
IRVTA   உங்கள் வார்த்தைகளினாலே யெகோவாவை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் யெகோவாவின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்மேல் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே. PE
ERVTA   நீ தவறானவற்றைக் கற்றுத் தந்திருக்கிறாய். அத்தவறான போதனைகள் கர்த்தரை மிகவும் துக்கமடையச் செய்தன. தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் விரும்புகிறார் என்று சொன்னீர்கள். அந்த ஜனங்கள் நல்லவர்கள் என்று தேவன் நினைப்பதாய் சொன்னீர்கள். தீயவற்றைச் செய்யும் ஜனங்களை தேவன் தண்டிக்கமாட்டார் என்று சொன்னீர்கள்.
RCTA   உங்களுடைய வார்த்தைகள் ஆண்டவருக்குச் சலிப்பையே தந்தன." அவருக்கு நாங்கள் எவ்வகையில் வருத்தம் தந்தோம்?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். "தீமை செய்கிறவர்கள் அனைவரும் ஆண்டவரின் முன்னிலையில் நல்லவர்கள், அவரும் அவர்களின் மட்டில் பூரிப்படைகிறார்" என்று சொல்லுகிறீர்களே! அல்லது, "நீதியின் கடவுள் எங்கே?" என்று கேட்கிறீர்களே!
ECTA   உங்கள் பேச்சுகளினால் ஆண்டவரைச் சோர்வடையச் செய்யாதீர்கள். "எவ்வகையில் அவரை நாங்கள் சோர்வடையச் செய்தோம்?" என்று வினவுகிறீர்கள். "தீச்செயல் புரிவோர் அனைவரும் ஆண்டவர் கண்ணோக்கில் நல்லவரே; அவரும் அவர்கள் மட்டில் பூரிப்படைகிறார்" என்று சொல்கின்றீர்கள் அல்லது "நீதியின் கடவுள் எங்கே?" என்று கேட்கிறீர்கள்.