Bible Language

Psalms 45 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
IRVTA   என்னுடைய இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது;
நான் ராஜாவைக் குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்;
என்னுடைய நாவு விரைவாக எழுதுகிறவனுடைய எழுத்தாணி.
ERVTA   அரசனுக்கு இவற்றை எழுதுகையில் அழகு சொற்கள் என் இதயத்தை நிரப்பும். தேர்ந்த எழுத்தாளனின் எழுதுகோல் வெளிப்படுத்தும் சொற்களாய் என் நாவிலிருந்து சொற்கள் வெளிப்படுகின்றன.
RCTA   இனிய கருத்தொன்றைப் பேச என் நெஞ்சம் துடிக்கிறது, என் பாடலை நான் அரசரிடம் கூறுகிறேன்: தயங்காமல் எழுதுவோனின் எழுது கோல் போலுள்ளது என் நாவு
ECTA   மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்றபோழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது; திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே!