Bible Language

Deuteronomy 33:2 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
IRVTA   “யெகோவா சீனாயிலிருந்து எழுந்தருளி,
சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்;
பாரான் மலையிலிருந்து பிரகாசித்து,
பத்தாயிரங்களான பரிசுத்தவான்களுடன் வெளிப்பட்டார்;
அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
ERVTA   மோசே சொன்னான்: "சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார். கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார். அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார். கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார். தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள்.
RCTA   ஆண்டவர் சீனாயினின்று வந்து செயீரிலிருந்து நமக்குள்ளே எழுந்தருளினார். அவர் பாரான் மலையிலிருந்து ஆயிரமாயிரம் புனிதர்கள் சூழத் தரிசனமானார். அவருடைய வலக்கையில் நெருப்புமயமான சட்டம் இருந்தது. அவர் மக்களை நேசித்தார்.
ECTA   ஆண்டவர் சீனாயினின்று வந்தார்; சேயிரினின்று அவர்களுக்குத் தோன்றினார்; பாரான் மலையினின்று அவர்கள் மீது ஒளிர்ந்தார்; பல்லாயிரம் புனிதர் புடைசூழ வந்தார்; அவரது வலப்புறத்தினின்று மின்னல் ஒளிர் திருச்சட்டம் ஏந்திவந்தார்.