Bible Language

Isaiah 63:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
IRVTA   நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
ERVTA   அவன் பதில் கூறுகிறான், "நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன். எவரும் எனக்கு உதவவில்லை. நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன். அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன.
RCTA   திராட்சைப் பழங்களை நாம் தனியாகவே மிதித்தோம், மக்களுள் யாரும் நமக்கு உதவியாய் வரவில்லை; நம் ஆத்திரத்தில் நாம் அவர்களை மிதித்தோம், நமது கோபத்தில் அவர்களைத் துவைத்தோம்; அவர்களின் செந்நீர் நம் ஆடைகளில் தெறித்தது, நம் மேலாடைகள் எல்லாம் கறைபட்டன.
ECTA   தனியாளாய் நான் திராட்சை பிழியும் ஆலையில் மிதித்தேன்; மக்களினத்தவருள் எவனும் என்னுடன் இருக்கவில்லை; என் கோபத்தில் நான் அவர்களை மிதித்தேன்; என் சினத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்கள் செந்நீர் என் உடைகள் மேல் தெறிந்தது; என் ஆடைகள் அனைத்தையும் கறையாக்கினேன்.