Versions
TOV அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
IRVTA அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியவர்கள்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் மகளே, அவர்கள் உனக்கு விரோதமாக போருக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள்.
ERVTA அவர்களது படைகள் வில்லும் ஈட்டிகளும் வைத்திருக்கிறார்கள். வீரர்கள் கொடுமையானவர்கள். அவர்களிடம் இரக்கம் இல்லை. வீரர்கள் தங்கள் குதிரைகளின்மேல் சவாரி செய்கிறார்கள். அந்த ஓசை இரைச்சலிடுகிற கடலைப் போன்றுள்ளது. அவர்கள் தம் இடங்களில் நிற்கிறார்கள். போருக்குத் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் பாபிலோன் நகரமே, உன்னைத் தாக்கத் தயாராக இருக்கிறார்கள்.
RCTA அவர்கள் வில்லையும் ஈட்டியையும் பிடித்துள்ளார்கள், அவர்கள் கொடியர்கள், இரக்கமற்றவர்கள்; அவர்களுடைய ஆரவாரம் கடலோசை போல் இரையும்; பபிலோன் என்னும் மகளே, உனக்கெதிராய்ப் போருக்கு அணி வகுத்து குதிரைகள் மேல் ஏறிக் கொண்டு வருகிறார்கள்.
ECTA அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்; அவர்கள் இரக்கமற்ற அரக்கர்கள்; அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் பேன்றது; மகளே பாபிலோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்துக் குதிரைகள் மீது சவாரி செய்து கொண்டு உனக்கு எதிராய் வருகின்றார்கள்.