Bible Language

Jeremiah 5:7 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள்.
IRVTA   இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்செய்து, வேசிவீட்டில் கூட்டங்கூடுகிறார்கள்.
ERVTA   "யூதாவே! உன்னை நான் எதற்காக மன்னிக்க வேண்டும், என்று ஒரு நல்ல காரணத்தை எனக்குக் கொடு, உனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள். அவர்கள் விக்கிரகங்களுக்கு, வாக்குறுதி செய்தனர். அந்த விக்கிரகங்கள் உண்மையில் தெய்வங்கள் அல்ல! நான் உனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தேன். ஆனால் அவர்கள் இன்னும் எனக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் வேசிகளோடு மிகுதியான காலத்தைச் செலவழிக்கிறார்கள்.
RCTA   நாம் உங்களை மன்னிப்பது எப்படி? உங்கள் மக்கள் நம்மைக் கைவிட்டார்கள்; கடவுளல்லாதவர்கள் பேரால் ஆணையிட்டார்கள்; நாம் அவர்களை வயிராற உண்பித்தோம்; அவர்கள் விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீடுகளுக்குக் கூட்டங் கூட்டமாய்ப் போனார்கள்.
ECTA   நான் ஏன் உன்னை மன்னிக்க வேண்டும்? உன் மக்கள் என்னைப் புறக்கணித்தார்கள்; தெய்வங்கள் அல்லாதவைமீது ஆணையிட்டார்கள்; அவர்கள் உண்டு நிறைவடையுமாறு செய்தேன்; அவர்களோ விபசாரம் பண்ணினார்கள்; விலைமாதர் வீட்டில் கூடினார்கள்;